
தான் வெனிசூலாவிற்கு தப்பியோடிவிட்டதாக கூறப்படுபவை பொய்யென்றும் ஒருபோதும் பதவியை விட்டுக்கொடுக்க போவதில்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அங்கு இடம்பெற்றுவரும் ஆர்ப்பாட்டங்களில் இதுவரை நூற்றுக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
கடாபிக்கு ஆதரவான இராணுவத்தினரால் ஆர்ப்பாட்டக்காரர்கள் சுடப்படுவதாகவும் சடலங்கள் வீதிகளில் கிடப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலக நாடுகள் பல கடாபிக்கு தங்களது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளன.


